Skip to main content

Posts

Featured

யாரும் நடுநிலையாளராக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது!

    நக்கீரன் வெளியிட்ட சின்ன குத்தூசியின் புதையல் கட்டுரை தொகுப்பின் முதல் பாகத்தை புரட்டி கொண்டிருந்தேன். காலச்சுவடு கண்ணனும், மனுஷ்யபுத்திரனும் இணைந்து மேற்கொண்ட சின்ன குத்தூசியின் முதல்  நேர்காணலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘யாரும் நடுநிலையாளராக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது’ என்று தலைப்பிடப்பட்ட  அதில் பெரியாருடன் ஏற்பட்ட தொடர்பு முதல் கலைஞருடன் ஏற்பட்ட முரணால் முரசொலியிலிருந்து விலகியது வரை பல சுவாரசியமான அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன் சலபதி இந்த நேர்காணலை குறிப்பிட்டு கவனிக்க சொன்னது நினைவுக்கு வந்தது.  திராவிட இயக்கத்திற்காக அறிவு தளத்தில் களமாடும் அன்பர்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில வரிகளை சின்ன குத்தூசி இதில் இயல்பாக அவருக்கே உரிய பாணியில் உதிர்த்திருந்தார், “எங்கே இருந்து எழுதினாலும் திராவிடர் இயக்கக் கொள்கைகளை ஆதரித்தே எழுதுவேன்; தி.மு.கழக அனுதாபி என்ற முத்திரையோடுதான் எழுதுவேன். சமூக நீதிக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே எழுதுவேன். இந்த ஒரு நிரந்தர நிலையை மட்டுமே எனது ஒரே பெருமையாக கருதுகிறேன்!” ...

Latest Posts

திருச்செங்கோடு வீழ்ந்தது திருப்பரங்குன்றம் வென்றது! Note on Kamaraj

ராபின்சன் பூங்கா கூட்டம்!

பொருத்தப்பாடற்ற NITI Aayog | The Caravan

End of Political Democracy? (Some Anxieties)

RSS எனும் Octopus!

Gracias Lukita!

போர் நின்று கொல்லும்! - ஷோபாசக்தியின் புனைவுலகம்.