திருச்செங்கோடு வீழ்ந்தது திருப்பரங்குன்றம் வென்றது! Note on Kamaraj
அண்மையில் வெளியான ‘The Dravidian Pathway’ என்ற ஆய்வு நூல் திமுக-பெரியார்-காமராஜர் ஆகியிருக்கு இடையில் நிலவிய சில முக்கியமான கண்ணிகளை புலப்படுத்தியது. 1954 தேர்தலில் குடியாத்தம் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காமராசர் போட்டியிட்ட போது அவரை பெரியாரும் ஆதரித்தார் தி.மு.கழகமும் ஆதரித்தது. காமராசருக்கு ஆதரவளிக்காமல் இருப்பது ராஜாஜிக்கான ஆதரவாக கருதப்படும் என்று அண்ணா கருதியிருக்கிறார். அரசியலில் தக்க நேரத்தில் முடிவெடுக்க வேண்டியது அவசியமானது. இந்த தேர்தல் வெற்றிக்கு பிறகு தான் ‘பச்சை தமிழர்’ என்று காமராசரை விளித்தார் தந்தை பெரியார். திருச்செங்கோடு வீழ்ந்தது திருப்பரங்குன்றம் வென்றது என்று எழுதினார் அண்ணா. கல்வித்திட்ட எதிர்ப்புக் காலத்திலும், தட்சிணப் பிரதேச எதிர்ப்புக் காலத்திலும், காமராஜர் கரத்தைப் பலப்படுத்தியவர்கள் பெரியாரும் அண்ணாவும். 1961-ஆம் ஆண்டு திருச்சியில் ‘பெரியார் நகரை’ திறந்து வைத்து உரையாற்றினார் காமராசர். பெரியாரின் ஆதரவு தான் காமராசர்-பெரியார் இடையிலான உறவை அணுக்கமான ஒன்றாக தக்கவைத்துள்ளது. 1967 தேர்தலில் மாணவ தலைவர் சீனிவாசன் காமராசரை வீழ்த்தியது இன்றளவும் பெரிய அள...