இஸ்லாமும் இன்பத் தமிழும்!!
இஸ்லாமும் இன்பத் தமிழும்!! பெருநாள் நிகழ்வை தொடர்ந்து அதையொட்டிய சில சிந்தனைகள் மனதில் அலையாடி கொண்டிருந்தன. கடந்த வாரம் பாசறை படிப்பறை பகுதிக்காக ‘Dravidian Sahibs and Brahmin Maulanas: The Politics of the Muslims of Tamil Nadu, 1930-1967’ என்ற நூலை படித்து கொண்டிருந்தேன், அதன் விளைவாக தோன்றிய எண்ணமென்று நினைக்கிறேன். —------ திமு கழகம் தொடங்கப்பட்ட 1949-ஆம் ஆண்டில் 110 பேரை கொண்ட பொதுக்குழுவில் எம்.எஸ்.எம் மொய்தீன், ஹஜாபீர் என்ற இரண்டு இஸ்லாமியர்கள் இடம்பெற்றிருந்தனர். பிரிவினையின் காரணமாக இஸ்லாமியர்கள் இந்திய தேசியவாதிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்த போதும், திராவிட நாடு கேட்டு கழகத்தில் பயணித்தனர். காரணம் திராவிட இயக்கம் கட்டமைத்த திராவிட-தமிழர் என்ற அடையாளம். 1957-ஆம் ஆண்டு தி.மு.கழகத்தின் உதவியுடன் அப்துல் வஹாப் ஜானி சென்னை மாகாண மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போல் 1947 முதல் 1962 வரையிலான தமிழ்நாட்டு காங்கிரஸ் ஆட்சியில் ஒரு இஸ்லாமிய பிரதிநிதிக்கு கூட அமைச்சர் பொறுப்பு வழங்கப்படாமல் இருந்த நிலையில், திமுகவும் அண்ணாவும் இதனை சுட்டிக்க...