சுய கருத்து சாம்பிராணி
சுய கருத்து சாம்பிராணி, இதுவரை தமிழ்நாடு கேட்டிராத ஒரு கருத்தை அண்மையில் உதிர்த்துள்ளார். தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக இஷ்டத்துக்குப் பேச வேண்டுமா என்ன? திராவிட இயக்கம் மொழி உரிமை போராட்டத்திற்குச் சொந்தம் கொண்டாடுவது அந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துவதென்று அவர் கூறியுள்ளார். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘செய்திக்கு அப்பால்’ என்ற நிகழ்ச்சியில் மொழிப் போராட்டம் குறித்து இவர் நிறுவ முயலும் கருத்துக்கள் அப்பட்டமான உள்நோக்கம் கொண்டவை. இந்த இயக்கம் நடத்திய போராட்டங்களையும் அதற்காக போராடிய இப்படி தான் பெரியார் குறித்த விவாதம் எழுந்த போது, பிற்படுத்தப்பட்ட மக்களின் God Father என்று அடையாள ரீதியாகப் பெரியாரை OBCகளின் தலைவராக மட்டும் சுருக்க முயன்றார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடமோ, தலித் தரப்பாரிடமோ இருந்து இதற்கு எதிர்வினை கிளம்பு என்று எதிர்பார்த்தேன், ஏமாற்றமே மிச்சம். மொழிப்போரில் முதல் கள பலியான 18 வயதே ஆன ல.நடராசன் குறித்து பேசும்போது, “அவர் எந்த இயக்கத்தில் இருதவர், அவருடைய கட்சி பின்னணி என்ன” என்று முட்டாள் தனமான கேள்விகளை எழுப்பிவிட்டு...