நூறு சாமி ft Right to marry
இயக்குனர் சசி அவர்கள் இயக்கிய ‘நூறு சாமி’ திரைப்படத்தை அண்மையில் பார்த்தேன். மிக அரிதாகவே தமிழ் திரையுலகம் இதுபோன்ற கதைகளை காட்சிப்படுத்த முன்வந்துள்ளது. அந்த வகையில் இது மிக துணிச்சலான முயற்சி. கைம்பெண் மறுமணம் குடும்பத்திலும் அதை சுற்றி இருக்கும் சமூகத்திலும் ஏற்படுத்தும் தாக்கம்தான் கதைகளம். 26 வயதில் கணவரை இழந்த பெண்ணின் அன்றாட வாழ்க்கை பாடுகளை இந்த படம் உணர்வுபூர்வமாக கடத்தியுள்ளது. தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களுள் ஒன்றான கள்ளக்குறிச்சியில் உள்ள சங்கராபுரம் ஒன்றியத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தின் கதை இது. வாசிப்பின் வாயிலாக ஏற்படும் மனமாற்றம் எத்தகைய புரட்சிகரமான முடிவுகளையும் எடுக்க வித்திடும் என்பதற்கு சாட்சியமாக திகழ்கிறது இந்த கதை. சாமிக்கும் மனுசனுக்கு நடுவுல பூசாரி எதுக்கு போன்ற பகுத்தறிவு மிக்க வசனங்களையும் மிக இயல்பாக பேசியது இந்த படத்தில் பலம். தாய்-மகன் பந்தத்தை கடந்து சமூகத்தில் Single Mother-ஆக இருக்கும் ஒருவரும், தந்தையின்றி வளரும் மகன்களும் அகம் சார்ந்து எவ்வித உளவியல் சிக்கல்களை எல்லாம் எதிர்கொள்கின்றனர் என்பதை யதார்த்தத்திற்கு நெருக்கமாக காட்சி படுத்தி ...

.jpeg)




