அரசியலும் ஆலயங்களும்!
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு பொதுவெளிகள் என்பவை ஏதோ ஒரு விதத்தில் அணுக்கமற்றவையாகவே திகழ்ந்தன. அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், நீதி மன்றங்கள் போன்ற அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கிய நவீன நிறுவனங்கள் மட்டுமின்றி மரபார்ந்த கோவில்கள், இதைச் சுற்றி இருக்கும் தெருக்கள் என அனைத்தும் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு அனுமதி மறுக்கும் ஒன்றாகவே விளங்கியது. அல்லது இந்நிறுவனங்கள் பார்ப்பனர்களிடம் இருந்து பார்ப்பனர் அல்லாதாரை வேறுபடுத்திக் காட்டவே பல வழமைகளை கடைப்பிடித்து வந்தன. நீதிக்கட்சி அரசு அமைந்த பிறகுதான் இந்த இறுக்கம் தளர்கிறது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே அறநிலையத் துறை பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படுகிறது. கோவில் trustee பொறுப்பில் பார்ப்பனரல்லாத எண்ணிக்கை அதிகரிக்க தொடங்குகிறது. கோவில்கள் இதன் பின் தான் மக்கள்மயபட தொடங்குகின்றன. பார்ப்பனரல்லாதார் தலைமை வகிக்கும் மடங்களின் சொத்துக்கள் எக்காரணத்தைக் கொண்டும் பார்ப்பனர்கள் கைகளுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதில் நீதிக்கட்சித் தலைவர்கள் உறுதியாக இருந்தனர். மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றினர். வைக்...


.jpeg)




