When உணர்வு Takesover அறிவு!
அரசியலில் அறிவை பின்னுக்குத் தள்ளி, உணர்வுக்கு முன்னுரிமை அளித்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு வரலாற்றுச் சாட்சியமாக வாழ்கிறோம் தமிழ்நாட்டு மக்களாகிய நாம். சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம் என்பது வர்த்தகம், போக்குவரத்து, கையாளும் திறன், பொருளியல் நலன் எனப் பல்வேறு அம்சங்களின் மூலம் நிறுவப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியாகி, நிலம் கையகப்படுத்துவதில் 90% பணிகள் நிறைவடைந்த பிறகும் கூட புதிய ஆட்சியாளர்களால் அந்தத் திட்டத்தைத் தீர்த்துக்கட்ட முடிகிறதென்றால், இந்த அவலத்தை எங்கே சென்று சொல்வது? ஏற்கனவே புதிய தலைமைச் செயலகம், மெட்ரோ ரயில் திட்டம் போன்றவை எல்லாம் தனிநபர் ஈகோவால்தான் தாமதமானது. அதற்கான விலையை நாம் இன்றுவரை கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இன்றைக்கும் புதிய தலைமைச் செயலகத்திற்கான குரல் சட்டமன்றத்தில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த அரசு கைவிட முடிவெடுத்திருக்கும் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் விளைவுகளை நாம் உடனடியாக உணரப்போவதில்லை. நம் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா ஆகியவை அடுத்த ஐந்தாண்டுகளில் நம்மைவிடச் சிறந்த Per Capita GDP, Per Capita Income-ஐக...



.jpeg)




