Hello World!
சுயவிமர்சனமாகவே இதை எழுதுகிறேன். சீர்படுத்தி செயல்பட வேண்டும் என்றே இதை குறிப்பிடுகிறேன். திமுக போன்ற பாரம்பரிய கட்சிகளுக்கு அதன் வரலாறும், மரபும், அதிகார படிநிலையும் சுமையாகி இருப்பதை கவனிக்க முடிகிறது. காலத்திற்கு ஏற்றார் போல் நாம் புதுப்பிக்க தவறிய சிந்தனைகள் நம்மை விரட்ட தொடங்கியுள்ளன. அதே பழைய சிந்தனைகளை புது மொழியில் சொல்லி கொண்டிருக்கிறோம். புது மொழியில் சொல்ல வேண்டிய புதிய சிந்தனைகளை உருவாக்க தவறியிருக்கிறோம். அல்லது தாமதித்து கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு முழுக்க தன்னெழுச்சியாக நடைபெறும் Gen Z சந்திப்புகள், வடிவமாக புதிதாக தோன்றினாலும், உள்ளடக்கத்தில் அவை மரபில் சிக்கி தவிப்பவை. தான் சார்ந்த தலைமுறையிடம் சமகால பிரச்சனைகள் குறித்து உரையாடாமல் மீண்டும் பழங்கதைகளையே பேசி வருகிறோமோ என்று தோன்றுகிறது. என் கூற்றில் தவறிருக்கலாம். போதாமைகளை யாரேனும் சுட்டிக்காட்டி தானே ஆக வேண்டும். பழங்கதைகளுக்கு ஒரு மதிப்பிருப்பதை மறுக்கவில்லை. ஆனால் பழங்கதைகளும் வரலாற்று பெருமிதங்களும் நம்மை எவ்வளவு தொலைவுக்கு கூட்டிச் செல்லும்? எதிர்காலம் பற்றிய நமது எண்ணம் என்ன? அரசியல்-பொருளாதாரம்- சமூக து...
.jpeg)




